internet

img

இனி வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

வாட்ஸ்அப் செயலியில், அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனி நபர் அல்லது நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த விதிமுறைகளை மீறும் பயனர்கள், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாதபடி தடை விதிக்க முடியும். இந்நிலையில், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக வாட்ஸ்அப் நேற்று அறிவித்துள்ளது.

தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்புவது மற்றும் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் இவ்வாறு செய்ய உதவுவோர் சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி முதல், வாட்ஸ்அப் விதிகளை, மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், வாட்ஸ்அப் விதிகளை மீறும் அக்கவுண்ட்களை கண்டறியும் வழிமுறைகளை மேம்படுத்தி வருகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்பும் மற்றும் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் வியாபார ரீதியான பயனர்களுக்கு உதவும் வகையில், ’வாட்ஸ்அப் பிஸ்னஸ்’ என்ற செயலி துவங்கப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.